ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் ஒரு சுரங்க என்ஜினீயர். 1989ம் ஆண்டு மேற்கு வங்க சுரங்கம் ஒன்றில் அவர் பணியாற்றியபோது சுரங்கத்தில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியபோது அதனை தனது சமயோசித மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர்களை மீட்டார். இதனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திலும், பஞ்சாபிலும் நிஜ ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். 2019ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது வாழ்க்கை தற்போது சினிமாவாகி வருகிறது. இதில் ஜஸ்வந்த் சிங்காக அக்ஷய்குமார் நடிக்கிறார். நிஜ ஜஸ்வந்த் சிங் லண்டனில் படித்தவர். அந்த காட்சிகள் இப்போது லண்டனில் படமாகி வருகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்ஷய்குமாரின் ஜஸ்வந்த்சிங் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமர் வைத்திருக்கும் செயற்கை தாடியும், முதிர்ச்சியான முகமும் சற்றும் ஜஸ்வந்த்சிங் போன்று இல்லை என்றும், செயற்கையான மேக்அப் மூலம் அக்ஷய்குமார் நடிப்பதை விட ஜஸ்வந்த்சிங் தோற்றம் கொண்ட ஒருவரை கொண்டு படத்தை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மாமன்னன் பிருத்விராஜின் தோற்றத்தை கெடுத்தது போன்று ஜஸ்வந்த் சிங் தோற்றத்தை அக்ஷய்குமார் கெடுக்க வேண்டாம் என்றும் கூறிவருகிறார்கள்.