நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கனவே தான் நடித்து சூப்பர் ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தை அடுத்து மலையாளத்தில் மாலிக் உட்பட பல படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்.
இந்த படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்ததால் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மலையாள சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் சுசின் ஷ்யாம் என்பவர் இசையமைக்க இருக்கிறாராம்.
அந்த வகையில் கமலின் புதிய படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று விக்ரம் படத்தில் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சில மலையாள நடிகர்கள் நடித்தது போன்று கமலின் புதிய படத்திலும் மலையாளத்தில் பிரபலமான சில நடிகர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.