மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.