படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தமிழை விட தெலுங்கில் நிறைய புதுமுக நாயகிகள், வளரும் நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் பல புதிய படங்கள் ஆரம்பிக்காத நிலையில் அறிமுக நடிகைகள் வருவதும் குறைந்துள்ளது.
தெலுங்கில், “டாக்சிவாலா, திம்மருசு, எஸ்ஆர் கல்யாண மண்டபம், கமனம்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். பேஷன் டிசைனிங் படித்து முடித்து பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தவர். சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நடிக்க அழைத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சாட் செய்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர், “கோலிவுட்டில் உங்களுக்கு யார் மீது ஆசை” எனக் கேட்டதற்கு, “எப்போதுமே தனுஷ், இப்போது சிம்புவையும் சில காரணங்களுக்காகக் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இருவருமே அழகானவர்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்.
தங்களைப் பிடிக்கும் எனச் சொன்ன பிரியங்காவிற்கு தனுஷ், சிம்பு இருவரில் யார் நடிக்க வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்?.