நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள திரையுலகை சேர்ந்த வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் கும்கி படத்தில் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அதைத்தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை, கதகளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாக, குறிப்பாக சைக்கோ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவியர்கள் முன்பாக காரில் இருந்தபடி தனது ஆடைகளை கழற்றி அநாகரிகமாக நடக்க முயன்றார். இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்ரீஜித் ரவி தான் அது என்பதை உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் சொல்லப்பட்டாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.