மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகை சேர்ந்த வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் கும்கி படத்தில் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அதைத்தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை, கதகளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாக, குறிப்பாக சைக்கோ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவியர்கள் முன்பாக காரில் இருந்தபடி தனது ஆடைகளை கழற்றி அநாகரிகமாக நடக்க முயன்றார். இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்ரீஜித் ரவி தான் அது என்பதை உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் சொல்லப்பட்டாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.