பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
கடந்த வாரம் இயக்குனர் ஹரி, நடிகர் அருண்விஜய் கூட்டணியில் யானை திரைப்படம் வெளியானது. அண்ணன்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் தம்பி என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டில் ஆணவக்கொலை என்கிற இன்னொரு விஷயத்தையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ஹரி. சரி படம் என்றாலே வழக்கமான சில கிளிஷே காட்சிகள் இருந்தாலும் கூட, படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
அந்தவகையில் இந்த யானை படத்திலும் ஹரியின் முந்தைய படங்களின் காட்சிகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அதேசமயம் ஹரியின் முந்தைய படங்களை போன்ற விறுவிறுப்பு இதில் குறைவாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்றும் நேற்று முதல் புதிய யானை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை படக்குழுவினர் வெளியிட மறுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.