நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம். புதிய படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த தளம் அந்த படத்தை வெளியிட்டு விடும், அதனை எல்லோரும் இலவசமாக பார்க்கலாம். இதனால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய இழப்பை சந்தித்து வருகிறார்கள். சில தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்சுடன் சமாதான கொடி பிடித்து தப்பித்த கதைகளும் உண்டு.
இப்படியான சூழ்நிலையில் தமிழ் ராக்கர்சை நேரடியாக எதிர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலேயே ஒரு வெப் சீரிஸ் தயாராகி உள்ளது. அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடர்குறித்து அறிவழகன் கூறியதாவது: ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனிலிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் ராக்கர்ஸ் காவலதிகாரி ருத்ராவின் கதை. சைபர் க்ரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் இந்த தொடர் வெளிப்படுத்தும். என்றார்.
இந்த தொடர் தமிழ் ராக்கர்சுக்கு எதிராக நேரடியாக உருவான தொடர் என்றாலும் இதை எதிர்த்து தமிழ்ராக்கர்ஸ் சட்ட நவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. காரணம் தமிழ்ராக்கர்சே ஒரு சட்டவிரோத இணையதளம்.