நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிரஞ்சீவியின் நடிப்பில் தற்போது காட்பாதர், போலோ சங்கர், இது தவிர அவரது 154வது படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதில் சிரஞ்சீவியின் 154வது படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தநிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர் என படிப்படியாக வளர்ந்து தற்போது ஹீரோ, கதையின் நாயகன் என வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் பிஜுமேனன். இதற்கு முன்னதாக தெலுங்கில் 2006-ல் வெளியான கதர்நாக், ரணம் என இரண்டு படங்களில் நடித்துள்ள பிஜுமேனன், கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி படம் மூலமாக தெலுங்கில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.