அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குனர் கதிரேசன் கூறுகையில், இந்த படம் 60% ஆக்சன் காட்சியில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக 10 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ள ராகவா லாரன்ஸ், பின்னர் காட்சிகளுக்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் லாரன்ஸ் இடையே பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் வித்தியாசமானதாகவும் இப்படம் இருக்கும். சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. தீமை பிறப்பதில்லை, படைக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தில் டேக் லைன் என்று கூறுகிறார்.