மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள சினிமாவின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் நடிகர்களில் நடிகர்களில் மூன்றாவது நபர் தான் நடிகர் சுரேஷ்கோபி. தற்போது அரசியலிலும் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியலுக்காக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் சுறுசுறுப்புடன் படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் நடித்து வரும் படங்கள் மற்றும் அவர் புதிதாக ஒப்புக்கொண்டுள்ள படங்கள் பற்றிய அறிவிப்புகளும் அப்டேட்டுகளும் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் சுரேஷ் கோபியின் 254வது படமாக 'ஹைவே-பார்ட் 2' என்கிற படம் உருவாக இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுரேஷ்கோபியே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 1995ல் சுரேஷ்கோபி நடிப்பில் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ஹைவே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த இரண்டு மொழி ரசிகர்களிடையே சுரேஷ்கோபியை ஆக்சன் ஹீரோவாக கொண்டு சேர்த்தது என்றும் சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கிய ஜெயராஜின் டைரக்சனில் அடுத்ததாக சில படங்களில் இணைந்து நடித்த சுரேஷ்கோபி அவரது டைரக்ஷனில் நடித்த களியாட்டம் என்கிற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். கடந்த 2006ல் வெளியான அஸ்வரூதன் என்கிற படத்தில் ஜெயராஜ் டைரக்சனில் நடித்திருந்த சுரேஷ்கோபி கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். பரத் நடித்து தமிழில் வெளியான '4 ஸ்டுடண்ட்ஸ்' மற்றும் சில நேரங்களில் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இயக்குனர் ஜெயராஜ் நன்கு அறிமுகமானவர்தான்.