டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்து 35 வருடங்களுக்கு மேலாக நடிப்பை மட்டுமே கவனித்து வந்த மோகன்லால், முதன்முறையாக இயக்குனராக மாறி இயக்கிவரும் ‛பாரோஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தான் நடித்து வந்த ராம் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளார் மோகன்லால். இது அவரது 353வது படமாகும். பஹத் பாசில் நடித்த அதிரன் படத்தை இயக்கிய விவேக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் ஷிபு பேபி ஜான் என்பவர் தயாரிப்பாளராகவும் அடி எடுத்து வைத்துள்ளார்.
“எனது 35 வருட கால நண்பரை தயாரிப்பாளராக மாற்றி ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால். ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தான் நடித்துவரும் ராம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார் மோகன்லால்.