அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தமிழில் உதயம், மாஸ் என்ற மாசிலாமணி, சகுனி என பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கர்ப்பமான பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரணிதா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛உண்மையிலேயே நான் ஒரு அதிர்ஷ்டசாலி. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் உள்ள டாக்டர் சுனில் உதவிடன் சீராக பிரசவம் நடைபெற்றது. என்னுடைய பிரசவ வலியை குறைப்பதற்காக முயற்சி எடுத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவக்குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு விருப்பமாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ள பிரணிதா, மருத்துவமனையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.