இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி | ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4' | இது புதுசு: ஆடியோ ஓடிடி துவக்கம் | விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது: ரஜினிகாந்த் புகழாரம் | 'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது |
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி நேற்று திருமணம் செய்தனர். இந்த நிகழ்வில் இருவரின் குடும்ப உறவுகளும் மிக நெருங்கிய நண்பர்கள் உடன் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். இந்த போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.