ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த புழு என்கிற படம் வெளியானது. நேற்று மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள டுவல்த் மேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.. என்றாலும் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் சிலருக்கு இது சந்தோசமான விஷயமாக அமைந்து விட்டது.
மோகன்லாலின் படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் கிட்டத்தட்ட 300 திரையரங்குகள் அவரது படத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவரது படம் நேரடியாக ஓடிடியிலேயே வெளியாகி விட்டதால், 5 சிறிய படங்கள் நேற்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளன.. அதேசமயம் இப்படி சிறிய படங்கள் தைரியமாக தியேட்டர்களில் வெளியாகும்போது எதற்காக மோகன்லால் ஜீத்து ஜோசப் என்கிற வெற்றிக்கூட்டணியில் உருவான டுவல்த் மேன் படத்தை ஓடிடியில் வெளியிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.