முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும், மீதி ரூ.4 கோடியை தரவில்லை. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த கதையை எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன். உண்மை நிலவரம் இப்படியிருக்க, படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடருவது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.