சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் ஆக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை தாண்டிய அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருக்கிறது, அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்று கூட அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக கிளம்பி அப்படியே அமுங்கி விடும்.
இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வாரம் ராதே ஷ்யாம் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைரேகை ஜோசியத்தில் கை தேர்ந்தவராக நடித்துள்ளார் பிரபாஸ்.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் அவரிடம் படத்தில் எல்லோருக்கும் கல்யாண விஷயம் குறித்து கை ரேகை பார்த்து சொல்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள், அந்த வகையில் உங்களது திருமணம் எப்போது என்று உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரபாஸ் காதல் விசயத்தில் எப்போதுமே என்னுடைய கணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கலாட்டாவாக பதில் கூற அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்தனர்.