மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' | 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், அவரது சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான தகவல்கள், செய்திகளைப் பகிர்வார்.
சற்று முன் இரண்டு சிறுமிகள் பாடிய ஒரு தமிழ்ப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த இரண்டு சகோதரிகள் சில சீரியசான கேள்விகளை இந்தப் பாடல் மூலம் கேட்கிறார்கள்” என்றும், “தண்ணீர், உணவு, மனித நேயம், அன்பு, இரக்கம்” ஆகிய ஹேஷ்டேக்குகளுடனும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான்.
அந்த சிறுமிகள் பாடிய பாடல் இயக்குனர் பாலா தயாரிப்பில், அருணகிரி இசையமைப்பில், அதர்வா ஆனந்தி, லால் நடித்து 2015ல் வெளிவந்த 'சண்டி வீரன்' படத்தில் இடம் பெற்ற 'தாய்ப்பாலும் தண்ணீரும்…' என்ற கிராமியப் பாடல். இந்த சிறுமிகளின் பாடலைப் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருப்பதால் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.