எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா..' என்ற ஒரு பாடலுக்கு சமந்தா கெட்ட ஆட்டம் ஆடியிருந்தார். அப்பாடலுக்கு தியேட்டர்களில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்தப் பாடலின் லிரிக் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே யூடியூப் தளத்தில் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. அந்த வீடியோவிற்கு மட்டும் தமிழில் இதுவரை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.
இப்பாடலின் முழு வீடியோ கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களிலேயே 1 கோடி பார்வைகளைக் கடந்து தொடர்ந்து டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்குப் பாடல் நான்கு நாட்களில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கு, தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, முதலில் இப்பாடலில் நடிக்கத் தயங்கினார். அவரை படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தான் வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். இப்போது இந்த ஒரு பாடலால் ரசிகர்களிடம் சமந்தாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.