அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தெலுங்கு சினிமாவில் 'பிரின்ஸ்' என்று அன்போடு அழைக்கப்படுகிறவர் மகேஷ் பாபு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு முழங்கால் வலி பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 14ம் தேதி ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முழுங்கால் பிரச்சினை குணமாகி படப்பிடிப்புக்கு திரும்பும் வேளையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான், மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன்.
என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் தடுப்பூசி கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.