மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' | 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி |
தற்போது ருத்ரன், யானை, பத்து தல , திருச்சிற்றம்பலம், இந்தியன்-2 என் பத்து படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். இதில் சர்ஜுன் என்பவரது இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பிளாட் மணி. இந்த படம் குவைத் நாட்டில் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படும் இரண்டு தமிழர்களை ஒரு செய்தி நிறுவனம் எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ஜீ 5 என்ற இணையதளத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் கதையாக சொல்லி இருக்கும் விதம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று கூறினார்.