ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹன்சிகா மொத்வானிக்கு, இந்தாண்டு, மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக கழிந்திருக்கிறது. தற்போது, சிம்புவுடன், "வாலு, வேட்டை மன்னன் ஆர்யாவுடன், "சேட்டை மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "இந்தாண்டில், உங்களின் திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என, ஹன்சிகாவிடம் கேட்டபோது, "இந்தாண்டில், என்னை விட, யாரும் அதிக சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. ஆண்டு முழுவதும், படப்பிடிப்புகளில் பிசியாகவே இருந்தேன். ஒரு ஆண்டு, உருண்டோடியதே தெரியவில்லை என, பெருமூச்சு விடுகிறார்.
"என்னுடைய இந்த திருப்திகரமான திரையுலக வாழ்வுக்கு, என்னுடன் நடித்த நட்சத்திரங்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என, அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக, என் படங்களை பார்த்து, ரசித்த ரசிகர்களுக்கும், என் வெற்றியின் பெரும் பங்கு, சேர வேண்டும். இந்தாண்டை போலவே, அடுத்தாண்டும், எனக்கு வாய்ப்புகள் குவிய வேண்டும். இதற்காக கடவுளிடம், மனம் உருக, பிரார்த்திக்க போகிறேன் என, உணர்ச்சி வசப்படுகிறார்.