பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், சிரஞ்சீவியின் உறவினருமான நடிகர் சாய் தரம் தேஜ், கடந்த மாதம் ஐதராபாத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
அதன்பிறகு சுயநினைவை இழந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது காலர் போன் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். உடனடியாக தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள சாய் விரும்பியதாகவும், ஆனால், அவரை இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே வீடு திரும்பியது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.