ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள சினிமா இயக்குனர் அஜயன், காலமானார். ஒரு படைப்பாளி எத்தனை படம் இயக்கினார் என்பதை விட, எத்தனை காலம் ரசிகர்களின் நினைவில் நிற்கிறார் என்பது தான் அவருக்கு கிடைக்கும் உயர்ந்த மரியாதை. அப்படி மலையாளத்தில் 1984ல் 'பெருந்தச்சன் என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கிய இயக்குனர் அஜயன் அந்தப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களை பட்டியலிட்டால் முதல் 5௦ படங்களில் இந்தப்படத்திற்கும் ஒரு இடம் இருக்கும். எம்.டி.வாசுதேவன் நாயரின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் இயக்குனரான இவர், பின்னாளில் அவரது கதையையே படமாக எடுத்து சாதனை செய்தார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அதன்பின் அவர் படம் எதுவுமே இயக்கவில்லை என்பதுதான்.
66 வயதான அஜயன், புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருக்கு கஷாமா என்ற மனைவியும், பார்வதி, லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அஜயன் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.