நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள சினிமா இயக்குனர் அஜயன், காலமானார். ஒரு படைப்பாளி எத்தனை படம் இயக்கினார் என்பதை விட, எத்தனை காலம் ரசிகர்களின் நினைவில் நிற்கிறார் என்பது தான் அவருக்கு கிடைக்கும் உயர்ந்த மரியாதை. அப்படி மலையாளத்தில் 1984ல் 'பெருந்தச்சன் என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கிய இயக்குனர் அஜயன் அந்தப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களை பட்டியலிட்டால் முதல் 5௦ படங்களில் இந்தப்படத்திற்கும் ஒரு இடம் இருக்கும். எம்.டி.வாசுதேவன் நாயரின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் இயக்குனரான இவர், பின்னாளில் அவரது கதையையே படமாக எடுத்து சாதனை செய்தார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அதன்பின் அவர் படம் எதுவுமே இயக்கவில்லை என்பதுதான்.
66 வயதான அஜயன், புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருக்கு கஷாமா என்ற மனைவியும், பார்வதி, லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அஜயன் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.