ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரேமம் புகழ் சாய் பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில, தியாவிற்கு பிறகு மாரி-2, என்ஜிகே படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் நானி நடித்த மஞ்சு உள்பட சில படங்களை இயக்கிய விரின்சி வர்மா, தனது புதிய படத்தில் நடிக்க சாய் பல்லவியை அழைத்து கதை சொல்லியிருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட சாய் பல்லவி, கதையில் தனக்கு சரியான முக்கியத்துவம் இல்லை என்று அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதையடுத்து, அவரிடம் நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்து விட்டதாம்.
இதுபோன்று தெலுங்கில் சில முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் கதை பிடிக்கவில்லை என்று சாய்பல்லவி தடாலடியாக மறுத்து விட்டதை அடுத்து, அவர் மீது பல இயக்குனர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.