பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படம் உருவாக இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷன்-மோகன்லால் கூட்டணியில் உருவாக இருக்கும் வரலாற்றுப்படத்தில், பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரணவ் மோகன்லால் மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கின்றனர்.
வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்காக துறைமுகம் மற்றும் பிரமாண்டமான பாய்மர கப்பல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரியதர்ஷனுடன் 3௦க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள சாபு சிரில் தான் இந்தப்படத்தின் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.