ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் மாஸ் மகாராஜ் என அழைக்கப்பட்டவர் நடிகர் ரவிதேஜா. ஆக்சன், காமெடி என கலந்துகட்டி இவர் நடிக்கும் படங்கள் இவரை மினிமம் கியாரண்டி ஹீரோவாக மாற்றின.. ஆனால் இப்போதோ அவரது நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது.
இந்த 2018லேயே மூன்று படங்களை ரிலீஸ் செய்துவிட்டார் ரவிதேஜா. ஆனால் மூன்றுமே பிளாப் லிஸ்ட்டில் தான் இடம் பிடித்தன. அதிலும் குறிப்பாக, அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படம், அதனுடன் வெளியான விஜய் தேவரகொண்டாவின் 'டாக்ஸிவாலா' படத்திற்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் தற்போது வி.ஆனந்த் என்பவரது டைரக்சனில் சயின்ஸ் பிக்சன் கதை ஒன்றில் நடித்து வருகிறார் ரவிதேஜா. இவர் இதுவரை நடிக்காத ஜானர் என்பதால் இந்தப்படம் தனக்கு கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறாராம் இந்த மினிமம் கியாரண்டி ஹீரோ.