ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பஹத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் 'வரதன்' என்கிற படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப்படம் தற்போது 35 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்தப்படத்தை தியேட்டர்களில் திரையிடுவதை நிறுத்தவேண்டும் என கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தப்படத்தில் கொடூர வில்லன்களாக நடித்திருந்த கதாபாத்திரங்கள் அனைவரும் கேராளவில் வசிக்கும் 'பப்பாளி' என்கிற குடும்பத்தை சேர்ந்தவர்களாக காட்டப்பட்டிருந்தனர். ஆனால் உண்மையிலேயே 'பப்பாளி என்கிற நிஜமான குடும்ப பெயர் கொண்ட ஒரு குடும்பத்தினருக்கு சமீபத்தில் தான் இந்த விஷயம் தெரியவந்ததாம். மேலும் படத்தின் கதாசிரியர்களில் ஒருவருக்கு இந்த பப்பாளி குடும்பத்தை நன்றாக தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இப்படி செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து தங்களது குடும்பத்தின் பெயரையும் புகழையும் கெடுக்கும் விதமாக வரதன் படம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், வழக்கை விசாரித்த எர்ணாகுளம் முனிசிபல் நீதிமன்றம் தொடர்ந்து வரதன் படத்தை திரையிட தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.