சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. கடத்தல், பாலியல் தொல்லை ஆகியவை தொடர்ந்து நடக்கிறது. இதற்கு எதிராக மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கம் போராடி வருகிறது.
சமீபத்தில் இதன் நிர்வாகிகளான ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிகை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க மலையாள நடிகர் சங்கம் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜெயசங்கரன் நம்பியார் அடங்கிய டிவிஷன் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.