ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், தற்போது லால்ஜோஸ் டைரக்சனில் தட்டின்புரத்து அச்சாயன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தார் குஞ்சாக்கோ போபன்.
அப்போது அவரருகே வந்த 75 வயதான ஒருவர், அவரைப்பற்றி தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் தன்னிடமிருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அங்கிருந்த ரயில்வே போலீஸார் உடனடியாக அந்த நபரை பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர் குஞ்சாக்கோ போபன் கண்ணூர் கிளம்பி சென்றார்.
குஞ்சாக்கோ போபன் ஒரு நடிகன் என்பதே தெரியாத அளவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை போலீஸார் பின்னர் மருத்துவமனையில் சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்களாம்.