மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளவர் இளம் நடிகர் நிவின்பாலி. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக 'ரிச்சி' என்கிற நேரடி தமிழ்ப்படத்தில் நடித்தார். ஆனால் அவ்வளவாக அது வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தற்போது அவர் நடித்துவரும் மூத்தோன் படம் ஒரே நேரத்தில் மலையாளத்திலும், இந்தியிலும் தயாராகி வருகிறது.
இதுபற்றி நிவின்பாலி கூறுகையில், “நடிகர்கள் தங்களுக்கான எல்லை கோட்டை தாண்டி சவால்களை சந்திக்க வேண்டும். தங்களுக்கு சரளமாக தெரியாவிட்டாலும் கூட மற்ற மொழிப்படங்களில் நடிக்க வேண்டும். ஒருவர் நடிகராக இருக்கிறார் என்பதே அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம். அதனால் தனது திறமையை ஒரு குறிப்பிடட்ட மொழியுடன் நிறுத்திக்கொள்ள கூடாது” என கூறியுள்ளார்.