மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
எந்த ஹீரோயினையும் குறைவாக மதிப்பிட கூடாது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறாத இவர், இப்போது காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக பரபரப்பாக படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் அரவிந்த சமேத படத்தை முடித்த கையோடு இந்தியில் உருவாகும் 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்சல்மர் பறந்துவிட்டார். இதை முடித்துவிட்டு பிரபாஸின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனால் 'அரவிந்த சமேத' படத்தின் புரமோஷன் நிகழ்சிகள் எதிலும் பூஜா ஹெக்டே கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் இருவரிடமும் மனிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் பூஜா ஹெக்டே.