ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதித்தவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், அவரது வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார்..
இந்தப்படத்தில் செந்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினயன். சாலக்குடி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, ஆட்டோ ஓட்டும் ஒரு காட்சியில் அச்சு அசலாக கலாபவன் மணியின் மேனரிசங்களுடன் நடித்தாராம் செந்தில் ராஜாமணி. உடனே அருகில் இருந்த சில ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்களாம்.
கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நண்பராக இருந்தவர்கள் தான் தங்களது நண்பனின் உருவமாக செந்தில் ராஜாமணியை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்களாம்.