ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை போட்டு லாபம் சம்பாதிப்பவர்களை விட, திறமையை மூலதனமாக வைத்து முன்னேறுகிறவர்கள் தான் அதிகம் ஜெயிக்கிறார்கள்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் கீதா கோவிந்தம் படத்தின் தயாரிப்பாளர் பன்னி வாஸும் அப்படி ஒரு நபர் தான்.. அந்த உண்மையை படத்தில் வெற்றி விழாவில் வெளிப்படுத்தினார் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ .
சுமார் 14 வருடங்களுக்கு முன் தில் ராஜு தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்திருந்த ஆர்யா படத்தின் பாலக்கோல் ஏரியா உரிமையை வாங்குவதற்காக தில் ராஜூவை சந்தித்தாராம் பன்னி வாஸ். அப்போது அவரின் ஆர்வத்தை பார்த்து அந்தப்படத்தின் மேற்கு கோதாவரி ரைட்ஸ் முழுவதையும் வாங்கிக்கொள்ளும்படி கூறினாராம் தில் ராஜூ.
அதற்கு சம்மதித்த பன்னி வாஸிடம் பாக்கெட்டில் இருந்த வெறும் 40 ரூபாயை மட்டும் அட்வான்ஸ் தொகையாக பெற்றுக்கொண்டாராம். அதன்பின் தனது திறமையால் வளர்ந்த பன்னி வாஸ் இன்று நாற்பது கோடி வசூலிக்கும் படத்தை தயாரிக்கும் அளவுக்கு தனது சக போட்டியாளராக வளர்ந்துவிட்டதை ஆச்சர்யத்துடன் நினைவு கூர்ந்தார் தில் ராஜூ.