சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கேரளாவில் மழை வெள்ளத்தின் ஆக்கிரமிப்பிற்கு சினிமா நட்சத்திரங்கள் சிலரும் தப்பவில்லை. நடிகர் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் நிலச்சரிவு பகுதி ஒன்றில் சிக்கி மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சலீம்குமாரின் வீட்டையும் வெள்ளம் சூழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் கொடுங்கொள்ளுர் போகும் வாழையில் பரவூர் என்கிற நகரத்தில் தான் சலீம்குமார் வசித்து வருகிறார். நேற்று முன் தினமே அவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடம் செல்ல தீர்மானித்தாராம்.. ஆனால் அருகில் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் பலர் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்ததால், அவர்களுக்காக தானும் வீட்டிலேயே தங்கிவிட்டாராம் சலீம் குமார்.
ஆனால் நேற்று வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து முதல் தளம் வரை மூழ்கிய நிலையில் சலீம்குமார் உள்ளிட்ட அனைவரும் மேல் தளத்திற்கு சென்றுவிட்டனர்.. சலீம்குமார் தனக்கு தெரிந்த சில மீடியாக்கள் வாயிலாக உதவி கோரி செய்தி அனுப்பியுள்ளாராம். இதுவரை அவர் மீட்கப்பட்டதா தகவல் எதுவும் வெளியாகவில்லை.