மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் வெளியான அபியும் அனுவும் படத்தில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது கேரளாவில் இருக்கும் இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது வீட்டையே நிவாரண முகாமாக மாற்றியமைத்து உதவி செய்துள்ளார்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் இவரது வீடு உள்ளது. இந்தப்பகுதியில் மழையின் தாக்கம் அதிகம் இருந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் குறைவு என கூறியுள்ள டொவினோ தாமஸ், வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் தனது வீட்டில் தாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
நிலைமை சீராகும் வரை அவர்களுக்கான அடிப்படை தேவைகளை தானே செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த உதவியை பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரேனும் தயவுசெய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.