ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் இதுவரை நடிகர் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியர் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். மற்ற திரையுலக பிரபலங்கள் நேரில் சொல்லாவிட்டாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தற்போது நடிகர் ஜெயசூர்யாவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மற்றும் ஆலுவா பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற ஜெயசூர்யா அரிசி, உட்பட சில அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் இதுபற்றி அவர்கூறும்போது, இன்னும் 10-15 நாட்களில் நிலைமை ஓரளவு சரியாகிவிடும்.. அதன்பின் மீடியாக்கள் இவர்களை மறந்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு சென்று விடுவார். அப்போது இவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்படும்.. அந்தசமயத்தில் மீண்டும் மக்களுக்காக நேரில் வருவேன்" என கூறியுள்ளார் ஜெயசூர்யா.