ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நம் தமிழ் சினிமாவில் நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் என நகைச்சுவை நடிகர்களின் அடைமொழி கொண்ட கதாபாத்திரங்கள் ரொம்பவே பிரசித்தம். அதேபோல மலையாள சினிமாவிலும் அவ்வப்போது இப்படி அடைமொழி கொண்ட காமெடி கேரக்டர்கள் சில படங்களில் இடம்பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
அந்தவகையில் மம்முட்டி, ராய் லட்சுமி நடித்த சட்டம்பி நாடு படத்த்தில் நகைசுசுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, நடித்திருந்த தசமூலம் தாமு கேரக்டர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒன்று. இப்போது அந்த பெயரிலேயே திரைப்படம் ஒன்று உருவாகிறது. அந்த டைட்டில் கேரக்டரில் சுராஜ் வெஞ்சாரமூடுவே கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் ஷபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளாராம்.