Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

போலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்

20 ஜூலை, 2018 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Roshini-Dinakar-file-complaint

இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிருத்விராஜ் - பார்வதி நடித்த மை ஸ்டோரி என்கிற படம் வெளியானது. இந்தப்படம் உருவானபோதே இயக்குனர் ரோஷினி தினக்கருக்கும், பிருத்விராஜூக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அதனால் படப்பிடிப்பு தாமதமாகி, படத்தின் பட்ஜெட்டும் 12 கோடியில் இருந்து 18 கோடியாக உயர்ந்தது. மேலும் படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பும் கிடைக்கவில்லை..

இந்தப்படத்தை பற்றி சோஷியல் மீடியாவில் சிலர் வேண்டுமென்றே தவறாக தகவல் பரப்பி படத்தை ஓடவிடாமல் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டிய இயக்குனர் ரோஷினி தினகர், தற்போது எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜியிடம் நேரடியாகவே புகார் ஒன்றை அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒரு ஆச்சர்யமான தகவலையும் கூறியுள்ளார் ரோஷினி.. அதாவது பிருத்விராஜ் - பார்வதி நடித்த இந்த மை ஸ்டோரி படத்தை பற்றி தவறாக கருத்து பரப்பி வரும் அதே நபர்கள் தான், இந்த இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியாகியுள்ள அஞ்சலி மேனனின் கூடே படத்தை பற்றி ஆஹா, ஓஹோவென புகழ்ந்து பாராட்டி செய்தி பரப்பி வருகிறார்களாம். அவர்கள் மீது தான் தற்போது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளாராம் ரோஷினி தினகர்.

லேட்டஸ்ட் நிலவரப்படி தற்போது தியேட்டர்களில் இருந்து தனது படத்தை எடுத்துவிட்டு, அடுத்த மாதம் மீண்டும் தியேட்டர்களில் திரையிட உள்ளதாக அறிவித்துள்ளார் ரோஷினி தினகர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in