வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பிரபல தெலுங்கு நடிகை ரேணு தேசாய். பவன் கல்யாணுடன் நடிக்கும்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பவன் கல்யாண், ரேணுகா தேசாய் தம்பதிகளுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். ரேணு தேசாய் மும்பையில் உள்ள தன் தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ரேணு தேசாய் தற்போது ஒருவரை காதலிக்கிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் ரேணு இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது. செய்ய விடமாட்டோம் என்று பவன் கல்யாண் ரசிகர்கள் மிரட்டி வருகிறார்கள். இதனால் 2வது கணவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்.
ரசிகர்கள் தொடர்ந்து மிரட்டுவதால் ரேணு தனது திருமணத்தை கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடத்த இருக்கிறார். இது தொடர்பாக ரேணு தேசாய் கூறியிருப்பதாவது: எனது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் எளிமையாக நடைபெறும். அப்போது அன்னதானம் செய்ய இருக்கிறோம். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் புதிய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. வருங்கால கணவரை எனது குழந்தைகள் அகிரா, ஆத்யாவுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அவரை தந்தையாக ஏற்றுள்ளனர் என்கிறார் ரேணுதேசாய்.