ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாளத்தில் மோகனலோரால் நடித்த நீராளி என்கிற படம் வெளியானது. தமிழில் உதயநிதி நடித்த இப்படை வெல்லும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா என்பவர் தான் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படம் குறித்தும் தன்னை பற்றியும் சோஷியல் மீடியாவில் தவறான செய்திகளை பரப்புவர்களை எச்சரித்துள்ளார் குருவில்லா.
விஷயம் இதுதான்.. சந்தோஷ் குருவில்லாவின் தந்தை இந்தியன் பெந்தகொஸ்தே சபையின் பொருளாளராக பொறுப்பு வகிக்கிறார்.. அதை பயன்படுத்திதான் குருவில்லா தற்போது படம் தயாரித்து வருகிறார் என்று சிலர் சோஷியல் மீடியாவில் கொளுத்தி போட்டுவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த செய்தியை பரப்பியவர்களை கண்டித்துள்ள குருவில்லா, தன் தந்தை பொருளாளர் ஆவதற்கு முன்பே தான் நான்கு படங்களை தயாரித்துள்ளதாகவும், அப்போதிருந்தே வெற்றிகரமான ஒரு பிசினஸ்மேன் ஆக தான் இருந்து வருவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.