ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் (AMMA) தற்போது நடிகர் திலீப் பிரச்சனையால் கலகலத்து போயுள்ளது.. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்ற அவரை எப்படி மீண்டும் சங்கத்தில் சேர்க்கலாம் என ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன்,கீத்து மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இந்தநிலையில் நடிகை அனுமோல் என்பவரும் நடிகர்சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
இவர் மலையாளி என்றாலும் அறிமுகமானது தமிழில் தான். தமிழில் திலகர் மற்றும் ஒருநாள் இரவில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பின் மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகியபின் தற்போது சுதந்திரமாக உணர்வதாக கூறினாலும் இவர் விலகியதற்கான காரணம் திலீப் பிரச்சனை இல்லையாம்.
"நடிகர் சங்கத்தில் இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் இருந்து உத்தரவுகள் வந்தன. நான் யாருடன் நடிக்க விரும்பவில்லையோ, யார் படத்தில் பணியாற்ற விரும்பவில்லையா அவர்களுடன் இணைந்து வேலைபார்க்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அதனால்தான் சங்கத்தில் இருந்து விலகியுள்ளேன். இப்போது நான் நடிகர்சங்கத்திலும் இல்லை.. அதற்கு எதிராக குரல்கொடுத்து வரும் சினிமா பெண்கள் நல அமைப்பிலும் சேர விரும்பவில்லை" என காரணம் கூறியுள்ளார் அனுமோல்.