ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பார்வதியை பொறுத்தவரை தன் மனதில் பட்ட கருத்துக்களை அது சரியா தவறா என கூட பார்க்காமல் பளிச்சென பேசி விடுவார். இதனாலேயே சர்ச்சை நடிகைகள் பட்டியலில் நடிகை ரீமா கல்லிங்கலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது, முக்கிய பொறுப்புக்கு தான் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் ஒரு சிலரால் தான் தடுக்கப்பட்டதாகவும் அவ்வப்போது சில பேட்டிகளில் கூறி வந்தார் பார்வதி.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லாலிடம் பார்வதி கூறியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், பார்வதியை போட்டியிட வேண்டாம் என யார் தடுத்தது..? நான் இதை நம்பவில்லை.. அது உண்மையாக இருந்தால், சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு, தன்னை யார் தடுத்தார்கள் என்பதை அவர் தைரியமாக கூறியிருக்கலாமே..? எங்களில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து விலகி இருப்போமே.. இப்போதும் கூட பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்" என சற்று காட்டமாக கூறியுள்ளார் மோகன்லால்.