ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ். இவர் அவ்வப்போது நாட்டு நடப்புகள் பற்றி பேசி பரபரப்பு கிளப்புவார். அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரச்னைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பார். கடந்த வாரம் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட கத்தி மகேஷ், இந்து கடவுள்கள் ராமன், சீதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.
இதனால் இந்து மத அமைப்புகள் மற்றும் சில பொது அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில சமூக விரோத மற்றும் அபாய நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நடிகர் கத்தி மகேஷ் 6 மாதங்களுக்கு ஐதராபாத் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனை மாநில போலீஸ் டி.ஜி.பி மகேந்திர ரெட்டி நேற்று அறிவித்தார்.