ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயசூர்யாவின் திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திருநங்கைகள் சிலருடன் கொச்சியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் ஜெயசூர்யா. அப்போது உடன் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சுல்பி மெஹர்ஜான் என்கிற திருநங்கைக்கு ஜெயசூர்யா கவுன்சிலிங் கொடுத்தார் முடிவில் அந்த திருநங்கை பெண்ணாக மாற பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார். அவரது இந்த முடிவிற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக அவருடைய பெற்றோர்களும் தங்கள் ஆதரவை ஜெயசூர்யாவிடம் தெரிவித்தார்கள்.