ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப். தொடர்ந்து தனது படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் திலீப், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஓரிரு முறை சில நிகழ்சசிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில் நீதிமன்றத்தில் இரண்டு கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்திருந்தார் திலீப்.
அதில் தான் நடிக்கவுள்ள புரபெஷர் டிங்கன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, சில நிபந்தனைகளை தளர்த்தும் விதமாக வைக்கப்பட்ட கோரிக்கை மனுவும் ஒன்று. ஆனால் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார் திலீப்.