ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் சினிமாவில் தங்களுக்கான இமேஜ் சரிந்துவிடும் என முன்னணி நடிகர்கள் பயந்த காலமும் உண்டு.. ஆனால் இன்று சின்னத்திரையின் வீச்சு அதிகமென்பதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க கூடிய நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைவதால் இமேஜ் இன்னும் உயரவே செய்யும் என்பதை புரிந்துகொண்டார்கள் சில நடிகர்கள்..
ஆமீர் கான், சல்மான் கான், சூர்யா, சரத்குமார், சுரேஷ்கோபி ஆகியோர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரைக்குள் வந்தது இப்படித்தான்.. கடந்த வருடம் நடிகர் கமலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக இன்னும் கொஞ்சம் பொதுவான ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டார் .தொடர்ந்து பிக் பாஸ்-2வையும் நடத்த தயாராகிவிட்டார்.
இந்தநிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதிரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது. மோகன்லால் அவ்வப்போது சின்னத்திரையில் சில சமூக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.