மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து ஆந்திராவின் முதல்வராக இருந்து மறைந்தவர் நடிகர் என்.டி.ராமராவ். 'கர்ணன்' படத்தில் கிருஷ்ணராக நடித்த தெலுங்கு நடிகர் என்டி.ராமராவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. மேலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் அவர்.
தெலுங்கில் எண்ணற்ற வெற்றிப் படங்களில் நடித்து, தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து முதல்வராகவும் உயர்ந்தவர். மறைந்த என்டிஆர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க அவரது மகன் பாலகிருஷ்ணா முன்வந்தார். என்டிஆர் ஆக பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் அப்படத்தின் துவக்க விழாவும் விமரிசையாக நடைபெற்றது. படத்தை தேஜா சில நாட்கள் இயக்கினார். அதற்குள் அவருக்கும் பாலகிருஷ்ணாவுக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால், படத்தை இயக்குவதிலிருந்து விலகினார் தேஜா.
பாலகிருஷ்ணாவும் பல இயக்குனர்களைத் தொடர்பு கொண்டு படத்தை இயக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால், ஒருவரும் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. கடைசியில் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரே இயக்க முடிவு செய்துவிட்டார். பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ், இயக்கம் மேற்பார்வை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதனால், பாலகிருஷ்ணா படத்தை இயக்கும் வேலையில் தற்போது இறங்கிவிட்டார். விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாம்.