ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஜெயராஜ். தமிழில் கூட பரத், கோபிகா, நரேன் நடித்த '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் சமீப வருடங்களாக கமர்ஷியல் படங்களை இயக்குவதை விட்டு ஒதுங்கி விருது படங்களாக இயக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவரது 'பயணகம்' என்கிற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
இத்தனை பெருமைகள் இருந்தும் இன்னும் மோகன்லாலை வைத்து இவர் ஒரு படம் கூட இயக்கவில்லையென்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான். ஆனால் எல்லோரையும் போலவே பல வருடங்களுக்கு முன் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் ஜெயராஜுக்கும் கொடுத்தார் மோகன்லால்..
எல்லாம் செட்டாகி, படப்பிடிப்புக்கு கிளம்பும் சமயத்தில் ஜெயராஜின் பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக இந்தப்படத்தை இயக்க முடியாமல் போய், படமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.. இத்தனைக்கும் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றிருந்த மோகன்லால், தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பாதியிலேயே இந்தப்படத்தில் நடிப்பதற்காக திரும்பி வந்தாராம். வந்தபின் தான் படம் கைவிடப்பட்ட தகவல் அவருக்கு தெரியுமாம்.
அந்த சம்பவத்தில் ரொம்பவே அப்செட்டானாரம் மோகன்லால். அதன்பின் மோகன்லாலை வெவ்வேறு சமயத்தில் சந்தித்து வெவ்வேறு கதைகளை ஜெயராஜ் சொன்னாலும், இபோதுவரை மோகன்லால் படத்தை இயக்குவது என்பது தனக்கு கானல் நீராகவே இருக்கிறது என வருத்தப்படுகிறார் ஜெயராஜ்.