ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் ஜெயசூர்யா தனது வீட்டிற்கு பின்புறமுள்ள ஆறு செல்லும் பகுதியில் அரசால் பராமரிக்கப்படாத 37 சென்ட் நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் அதை சுற்றி சுற்றுச்சுவரும் எழுப்பியுள்ளதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் மேல் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூவாட்டுப்புழா விஜிலன்ஸ் நீதிமன்றம், இதனை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி டெபுடி கமிஷனருக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறினார் ஜெயசூர்யா.
அது புறம்போக்கு நிலம் என்றாலும் குழந்தைகள் விளையாடும்போது ஆற்றில் தவறி விழுந்துவிடாமல் இருக்கவே சுற்றுச்சுவர் அமைத்தேன் என்றும், அதனால் அதை இடிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்பை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.