ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல கன்னட நடிகை சைத்ரா. அறிமுகமானபோது ஹீரோயினாக சில படங்களில் நடித்த இவர், தற்போது வில்லி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். சைத்ராவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி போத்ராவுக்கும், 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். தற்போது சைத்ரா, தனது கணவர் மீது கொலை முயற்சி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புவனேஸ்வர் காவல் நிலையத்தில் அவர் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
திருமணத்துக்கு பிறகு எனது கணவர் என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார். மோசமான வார்த்தைகளால் திட்டினார். சித்ரவதை செய்தார். நான் வெளியே செல்லும்போதெல்லாம் துப்பாக்கியுடன் அடியாட்களை என்னுடன் அனுப்பினார். எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றால் கூட அடியாட்கள் பின் தொடர்ந்தனர்.
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சினிமாவில் நடிக்கக்கூடாது என்றும் தடுத்தார். அதனால் சில டெலிவிஷன் தொடர்கள் தயாரித்தேன். அதில் வந்த லாபத்தையும் பறித்துக்கொண்டார். காரில் இருவரும் பயணம் செய்யும்போதும் தகராறு நடக்கும். என் தலையில் ஓங்கி குட்டுவார். கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்யவும் முயன்றார். அவர் தாக்கியதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளேன்.
இன்னொரு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதால் இப்படி எல்லாம் செய்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து என்னை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் சைத்ரா கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.